|
திங்கள், 11 அக்டோபர், 2010
வியாழன், 16 செப்டம்பர், 2010
யாழ்ப்பாணத்தில் தடம்பதிக்கும் Airtel நிறுவனம் அதிக 41 க்கும் அதிகமான கோபுரங்களை நிறுவி சாதனை
யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக dialog நிறுவனம் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக 4 க்கும் மேற்பட்ட செல்போன் நிறுவனங்கள் இருந்து வருகின்றது. இப்பொழுது இலங்கையிலே புதிதாக தடம்பதித்த நிறுவனம் யாழ்பாணத்தில் 41க்கும் அதிகமான கோபுரங்களை அமைத்துள்ளது. ஏனென்றால் மற்றய செல்போன் நிறுவனங்கள் யாழ்பாணத்தில் 25க்குட்பட்ட கோபுரங்களையே அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதன், 11 ஆகஸ்ட், 2010
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம்: அதிகாரிகளை திருப்பியனுப்பிய கிராம மக்கள்..!
Posted: June 14, 2010 by chillsam in chillsam for you..!Tags: அரசாங்கம், ஆசாரிகள், ஆத்துமா, இறைவன், கல்வி, குயவர், சுகாதாரம்,தீயசக்தி, பிரார்த்தனை, மக்கள், மூடநம்பிக்கை, வாகனப் போக்குவரத்து, விவசாய பயன்பாட்டு இயந்திரங்கள், call, evidence, faith, family, fundamentalists, hindu, Knowledge,question, satan
1
ஆத்தூர்: “கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம்’ என்று கூறிய கிராம மக்கள், “இலவச வீடே வேண்டாம்’ என, கூறி அதிகாரிகளை திருப்பியனுப்பினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட கருத்தராஜாபாளையம் கிராமத்தில் 600 குடியிருப்புகளில் 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கிராம மக்களின் குலதெய்வமாக பெரியசாமி ஸ்வாமி கோவில் உள்ளது. இரவு நேரத்தில் பெரியசாமி ஸ்வாமி கிராம பகுதி வழியாக வேட்டைக்கு செல்வதாகவும், ஊரை காப்பாற்றி பாதுகாத்து வருவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
அதே போல கான்கிரீட் வீடோ, மாடி வீடோ கட்டினால் தெய்வ குற்றம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் அந்த கிராமத்தில் இன்றளவும் ஒரு கான்கிரீட் வீடுகூட இல்லை.
தமிழக அரசின் இலவச வீட்டு வசதி திட்டத்துக்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கு சென்ற அலுவலர்கள், கருத்தராஜாபாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருப்பதை கண்டு கணக்கெடுப்பில் சேர்க்க முற்பட்டனர். பொதுமக்களோ, குடிசை வீடே போதும் என்று அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.
கருத்தராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது: கருத்தராஜாபாளையத்தில் பழமை வாய்ந்த பெரியசாமி, கருப்பையா கோவில் உள்ளது. இந்த கோவிலிலுள்ள ஸ்வாமி நாள்தோறும் ஊஞ்சலில் அமர்ந்து விளையாடி வருவதால், வீடுகளில் படி வைத்து கட்ட கூடாது. மாடியில் நின்று ஸ்வாமியை பார்க்க கூடாது.
எனவே இன்றளவும் கூரை, ஓட்டு வில்லை வீடுகள் மட்டுமே இந்த கிராமத்தில் உள்ளது.கான்கிரீட் வீடுகள் கட்டினால் தெய்வ குற்றமாகிவிடும். 140 ஆண்டுகளுக்கு மேலான ஓட்டு வில்லை வீடுகளே உள்ளன.
இரவில் பெரியசாமி ஸ்வாமி வேட்டைக்கு செல்வதால் கோவிலில் மின்விளக்கு போடுவதில்லை. வீடுகளில் குழந்தைகளை தொட்டில் கட்டி போட மாட்டோம். தரையில் தான் தூங்க வைப்போம். ஸ்வாமி கோவில் விழா நடத்தினால் விருந்து கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
மண்பானை செய்யும் குயவர்கள், மரம் மற்றும் நகை சிற்ப ஆசாரிகள் கிராமத்தில் இல்லை. உலி சத்தமும் கேட்க கூடாது. அவ்வாறு உறவினர்களாக குயவர், ஆசாரிகள் வந்தாலும் இரவில் தங்க கூடாது.
கிராமத்தில் இருவர் மாடி வீடுகளை கட்டினர். அவர்களது குடும்பத்தில் உடனடியாக பிள்ளைகள், மூத்தவர்கள் இறந்துவிட்டதோடு ஏழ்மை நிலைக்கு வந்தனர். அரசு தொகுப்பு வீடு கட்டிய வெங்கடேஷ், மருதை ஆகிய இருவரது வீட்டில் தந்தை இறந்தனர். தொகுப்பு வீட்டை இடித்து ஓட்டு வீடாக கட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கிராம மக்கள் கூறியதாவது: மாரியம்மன் கோவில் கிணற்றை தூர் எடுத்தல், தேர் இழுத்தல், கபாடி போட்டிகள் நடத்தினால் மழை பொழியும்.கோவில் விழாவின்போது பெரியசாமி கோவிலில் ரேடியோ, மின்விளக்கு போன்றவைகள் பயன்படுத்துவதில்லை.
அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் கூரை வீடு குறித்து கணக்கெடுப்பு செய்ய வந்தனர். கான்கீரிட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றமாகி, கிராமத்திலுள்ளவர்கள் இறக்க நேரிடும் என விளக்கம் அளித்தோம். கூரை வீடுகளிலேயே வாழ்ந்தாலும் மாடி வீடு தேவையில்லை என கூறி அனுப்பிவிட்டோம். கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சம் இல்லாத கிராமமாக இருக்க குலதெய்வம் தான் காரணம், என்றனர்.-இது நாளிதழ் செய்தி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17537
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட கருத்தராஜாபாளையம் கிராமத்தில் 600 குடியிருப்புகளில் 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கிராம மக்களின் குலதெய்வமாக பெரியசாமி ஸ்வாமி கோவில் உள்ளது. இரவு நேரத்தில் பெரியசாமி ஸ்வாமி கிராம பகுதி வழியாக வேட்டைக்கு செல்வதாகவும், ஊரை காப்பாற்றி பாதுகாத்து வருவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
அதே போல கான்கிரீட் வீடோ, மாடி வீடோ கட்டினால் தெய்வ குற்றம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் அந்த கிராமத்தில் இன்றளவும் ஒரு கான்கிரீட் வீடுகூட இல்லை.
தமிழக அரசின் இலவச வீட்டு வசதி திட்டத்துக்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கு சென்ற அலுவலர்கள், கருத்தராஜாபாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருப்பதை கண்டு கணக்கெடுப்பில் சேர்க்க முற்பட்டனர். பொதுமக்களோ, குடிசை வீடே போதும் என்று அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.
கருத்தராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது: கருத்தராஜாபாளையத்தில் பழமை வாய்ந்த பெரியசாமி, கருப்பையா கோவில் உள்ளது. இந்த கோவிலிலுள்ள ஸ்வாமி நாள்தோறும் ஊஞ்சலில் அமர்ந்து விளையாடி வருவதால், வீடுகளில் படி வைத்து கட்ட கூடாது. மாடியில் நின்று ஸ்வாமியை பார்க்க கூடாது.
எனவே இன்றளவும் கூரை, ஓட்டு வில்லை வீடுகள் மட்டுமே இந்த கிராமத்தில் உள்ளது.கான்கிரீட் வீடுகள் கட்டினால் தெய்வ குற்றமாகிவிடும். 140 ஆண்டுகளுக்கு மேலான ஓட்டு வில்லை வீடுகளே உள்ளன.
இரவில் பெரியசாமி ஸ்வாமி வேட்டைக்கு செல்வதால் கோவிலில் மின்விளக்கு போடுவதில்லை. வீடுகளில் குழந்தைகளை தொட்டில் கட்டி போட மாட்டோம். தரையில் தான் தூங்க வைப்போம். ஸ்வாமி கோவில் விழா நடத்தினால் விருந்து கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
மண்பானை செய்யும் குயவர்கள், மரம் மற்றும் நகை சிற்ப ஆசாரிகள் கிராமத்தில் இல்லை. உலி சத்தமும் கேட்க கூடாது. அவ்வாறு உறவினர்களாக குயவர், ஆசாரிகள் வந்தாலும் இரவில் தங்க கூடாது.
கிராமத்தில் இருவர் மாடி வீடுகளை கட்டினர். அவர்களது குடும்பத்தில் உடனடியாக பிள்ளைகள், மூத்தவர்கள் இறந்துவிட்டதோடு ஏழ்மை நிலைக்கு வந்தனர். அரசு தொகுப்பு வீடு கட்டிய வெங்கடேஷ், மருதை ஆகிய இருவரது வீட்டில் தந்தை இறந்தனர். தொகுப்பு வீட்டை இடித்து ஓட்டு வீடாக கட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கிராம மக்கள் கூறியதாவது: மாரியம்மன் கோவில் கிணற்றை தூர் எடுத்தல், தேர் இழுத்தல், கபாடி போட்டிகள் நடத்தினால் மழை பொழியும்.கோவில் விழாவின்போது பெரியசாமி கோவிலில் ரேடியோ, மின்விளக்கு போன்றவைகள் பயன்படுத்துவதில்லை.
அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் கூரை வீடு குறித்து கணக்கெடுப்பு செய்ய வந்தனர். கான்கீரிட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றமாகி, கிராமத்திலுள்ளவர்கள் இறக்க நேரிடும் என விளக்கம் அளித்தோம். கூரை வீடுகளிலேயே வாழ்ந்தாலும் மாடி வீடு தேவையில்லை என கூறி அனுப்பிவிட்டோம். கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சம் இல்லாத கிராமமாக இருக்க குலதெய்வம் தான் காரணம், என்றனர்.-இது நாளிதழ் செய்தி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17537
ஊருக்கு ஒரு கோடாங்கியையும் நாட்டுக்கு ஒரு நாட்டாமையையும் வைத்துக்கொண்டு இந்த மக்கள் செய்கிற அலம்பல்கள் சொல்லிமாளாது;
இப்படியே கல்வி,சுகாதாரம்,வாகனப் போக்குவரத்து,விவசாய பயன்பாட்டு இயந்திரங்கள் என அனைத்திலும் இந்த மக்களை நம்பவைத்து அவர்கள் நிலையை மேம்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிறது;
அரசாங்க அதிகாரிகள் ஊழலால் சதுரமாகி முக்கோணமாகிப் போன அரசு ஏந்திரத்தை வைத்துக்கொண்டு எப்படியோ கொண்டு சென்று சேர்க்கப்பார்க்கும் திட்டங்களும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளால் தடைபட்டு நிற்கிறது;
அரசாங்கத்தை மக்கள் நம்புவதற்கும் மக்களை அரசாங்கம் நம்பவைப்பதற்கும் படுகிற பாடுகளைப் பார்த்து இறைவன் நகைக்கிறான்..!
Rate This
திங்கள், 1 பிப்ரவரி, 2010
மாமிசத் தாவரங்கள் மனிதனைக் கொன்று தின்னுமா ... ?
மாமிசத்தை உண்ணும் தாவரங்கள் நிறையவே இருக்கின்றன. மிகப் பிரபலமான உதாரணம் நெபந்தஸ் என்ற தாவரம். தாவரங்கள் என்பவை விலங்குகள் உண்பதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமே. எப்படி சில தாவரங்கள் நான்-வெஜிடேரியனாக மாறிவிடுகின்றன. சிங்கம் , புலி போல இத்தாவரங்கள் சுத்தமான அசைவப் பிரியர்களா இவை... ? இதற்குப் பதில் என்னவென்றால் இல்லை என்பதுதான். பிறகு ஏன் இவை மாமிசம் சாப்பிடுகின்றன..? நமக்குப் போரடித்தால் வாரத்தில் ஒரு தடவை ஞாயிற்றுக் கிழமை சிக்கன் 65 சாப்பிடுகிறோமே அது போலவா..?
உண்மையில் மற்ற தாவரங்களைப் போலவே இத்தாவரங்களுக்கும் பச்சையம் உண்டு. இவை வாழ நீர் , சூரிய ஒளி , காற்று அவசியம். ஆனால் இவை தவிர சில முக்கியத் தனிமங்களும் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனிமங்கள் இவை வளரும் நிலத்தில் இருப்பதில்லை. அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கும். எனவே இந்த நைட்ரஜன் போன்ற தனிமங்களுக்காகத்தான் பூச்சி போன்ற சிறிய விலங்குகளைத் தின்றுவிடுகின்றன.
சமீபத்தில் நெதர்லாந்து போயிருந்தபோது இந்த நெபந்தஸ் தாவரம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன பூச்சட்டியில் முழுத்தாவரத்தையும் விற்பனைக்காகத் தொங்கவிட்டிருந்தார்கள். இத்தாவரம் பூச்சிகளைக் கவர அதற்கே உரிய ஒரு வாசனையைப் பரப்பும். இந்த வாசனையை நுகர்ந்து பூவுக்குள் பூச்சி நுழைந்தவுடன் தாவரம் தயாராக வைத்திருக்கும் மூடியைக்கொண்டு அப்பூவை மூடிவிடும். அப்புறமென்ன உள்ளே போன பூச்சியின் கதி அதோ கதிதான்.
ஆனால் நாம் பொங்கலுக்குக் கரும்பைக் கடித்து, அரைத்து தின்பதுபோல பூச்சியைத் தின்ன அத்தாவரத்துக்குப் பற்கள் இல்லை. ஆனால் மற்ற படி நாம் உணவைச் ஜீரணிப்பதுபோலத்தான் அதுவும் ஜீரணிக்கிறது. பூச்சியைப் பிடித்ததும் அந்தப் பூ ஒரு சின்ன வயிறு போலவே செயல்பட ஆரம்பிக்கிறது. மெதுவாக ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அந்தத் திரவம் பூச்சியின் முழு உடலையும் கரைத்த பின்னர் அதிலுள்ள , கனிமங்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. சரி, இது சின்னப் பூச்சிகளுடன் நிறுத்திக்கொள்கிறதா ? இல்லை, சிறிய தவளைகள், சில சமயம் எலிகள் கூட இத்தாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதனைத் தின்னுமளவுக்கு தாவரங்கள் இல்லை என்பதே உண்மை. இவ்வகைத்தாவரங்கள் மனிதனைக்கூடத் தின்னும் என்ற வதந்தி பரவக் காரணம். பல மீட்டர் வரை வளரும் அமர்போபாலஸ் டைட்டானியம் போன்ற அசைவத்தாவரங்களாக இருக்கலாம். இவை வளர்ந்தவுடன் பூச்சிகளை ஈர்க்க நம்மால் சகிக்கமுடியாத துர்நாற்ற்த்தைப் பரப்பும், கிட்டத்தட்ட அந்த நாற்றம் ஒரு மனிதன் அந்த பூவுக்குள் இறந்து,அழுகிக்கிடப்பதைப் போல் இருக்குமாம். இது போல் நிறையத் தாவரங்கள் இருக்கின்றன. இதனால் இத்தகைய கட்டுக்கதைகள் பரவியிருக்கலாம்.
உண்மையில் ஒருவர் சொன்னது போல, அசைவத்தாவரங்களால் மனிதனுக்கு ஆபத்து என்பதை விட மனிதனால் அசைவத்தாவரங்களுக்கு ஆபத்து என்பதே பொருத்தமாக இருக்கும். இவற்றின் பிரபலத்தன்மையே அவற்றுக்கு ஆபத்தாகிவிட்டது. இதைக் கண்டவுடன் வேரோடு பிடுங்கி , விற்றுவிடுகின்றனர். இதனால் இப்போது இத்தாவரங்கள் அருகி வருகின்றன.
சனி, 16 ஜனவரி, 2010
வானில் நிகழ்ந்த அற்புதத்தைக் கண்டு களித்த இந்தியர்கள்
அரிதாகத் தோன்றும்கங்கணம் போன்றநூற்றாண்டின் நீண்டநேர சூரியகிரகணத்தை இன்றுஉலகெங்கும்மக்களனைவரும்கண்டு களித்தனர். மாலத்தீவுகளில் இதனைமிகவும் தெளிவாகக் காணலாம் என்றுவிஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். சூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வர, முழுதும் மறைக்க முடியாமல், சூரியனின் நடுப்பகுதி மட்டும் மறைய, சூரியனின் விளிம்பு விட்டம் மட்டும் நெருப்பு வளையமாகக் காட்சியளித்த வானியல் அதிசயத்தைக் கண்டு இந்தியர்கள் அதிசயித்தனர். இது 11 நிமிடங்கள், 8 விநாடிகளுக்கு நீடித்தது. இது போன்ற சூரிய கிரகணம் அடுத்ததாக 2020ஆம் ஆண்டுதான் தோன்றும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 11 மணிக்கு இந்தியாவில் தோன்றிய இந்தக் கிரகணம் கன்னியாகுமரி, ராமேச்வரம், தனுஷ்கோடி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நெருப்பு வளையமாக, வானில் ஒரு பெரிய கண் இருப்பது போன்று காட்சியளித்ததை பலரும் வியப்புடன் கண்டு களித்தனர். சரியாக மதியம் 3.11 மணிக்கு கிரகணம் மறைந்தது. இதைக்காணவென்றே பிரத்யேகமாக இந்தியாவிற்கு வந்த ஜெர்மனி வானியல் ஆர்வலர் டேனியல் பிஷர் வார்கலாவில் உள்ள மலை உச்சியிலிருந்து கிரகணத்தைக் கண்டுகளித்தார். இவர் இதுவரை தன் வாழ்நாளில் பல்வேறு நாடுகள் சென்று 23 சூரிய கிரகணங்களைக் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய கங்கண சூரிய கிரகணத்தினால் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் 3 ராக்கெட்டுகளை வியாழனன்று அனுப்பியது. மேலும் 5 ராக்கெட்டுகளையும் அனுப்பவுள்ளது. இந்தியா தவிர மத்திய ஆப்பிரிக்கா, மாலத்தீவுகள், வடக்கு இலங்கை, மியான்மாரின் சில பகுதிகள் மற்றும் சீனாவில் இந்த நெருப்பு வளையம் தெரிந்ததாக நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)