சனி, 16 ஜனவரி, 2010

வானில் நிகழ்ந்த அற்புதத்தைக் கண்டு களித்த இந்தியர்கள்




ரிதாகத் தோன்றும்கங்கணம் போன்றநூற்றாண்டின் நீண்டநேர சூரியகிரகணத்தை இன்றுஉலகெங்கும்மக்களனைவரும்கண்டு களித்தனர். மாலத்தீவுகளில் இதனைமிகவும் தெளிவாகக் காணலாம் என்றுவிஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். சூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வர, முழுதும் மறைக்க முடியாமல், சூரியனின் நடுப்பகுதி மட்டும் மறைய, சூரியனின் விளிம்பு விட்டம் மட்டும் நெருப்பு வளையமாகக் காட்சியளித்த வானியல் அதிசயத்தைக் கண்டு இந்தியர்கள் அதிசயித்தனர். இது 11 நிமிடங்கள், 8 விநாடிகளுக்கு நீடித்தது. இது போன்ற சூரிய கிரகணம் அடுத்ததாக 2020ஆம் ஆண்டுதான் தோன்றும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 11 மணிக்கு இந்தியாவில் தோன்றிய இந்தக் கிரகணம் கன்னியாகுமரி, ராமேச்வரம், தனுஷ்கோடி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நெருப்பு வளையமாக, வானில் ஒரு பெரிய கண் இருப்பது போன்று காட்சியளித்ததை பலரும் வியப்புடன் கண்டு களித்தனர். சரியாக மதியம் 3.11 மணிக்கு கிரகணம் மறைந்தது. இதைக்காணவென்றே பிரத்யேகமாக இந்தியாவிற்கு வந்த ஜெர்மனி வானியல் ஆர்வலர் டேனியல் பிஷர் வார்கலாவில் உள்ள மலை உச்சியிலிருந்து கிரகணத்தைக் கண்டுகளித்தார். இவர் இதுவரை தன் வாழ்நாளில் பல்வேறு நாடுகள் சென்று 23 சூரிய கிரகணங்களைக் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய கங்கண சூரிய கிரகணத்தினால் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் 3 ராக்கெட்டுகளை வியாழனன்று அனுப்பியது. மேலும் 5 ராக்கெட்டுகளையும் அனுப்பவுள்ளது. இந்தியா தவிர மத்திய ஆப்பிரிக்கா, மாலத்தீவுகள், வடக்கு இலங்கை, மியான்மாரின் சில பகுதிகள் மற்றும் சீனாவில் இந்த நெருப்பு வளையம் தெரிந்ததாக நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!


June 6, 2009 | 1,717 views

பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!

பிரபுதேவாவும் நடிகை நயன்தாராவும் ஹைதராபாத்தில் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்தச் செய்தியை நயன்தாரா தரப்பில் மறுத்தாலும், பிரபுதேவா குடும்பத்தினர் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டனர்.

மீடியா முழுக்க இதே செய்தியாக உள்ளது இன்றைக்கு. இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முதல்நிலை நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா.

‘ஐயா’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார். அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகி முதல் நிலை நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

பின்னர் ‘வல்லவன்’ படத்தில் சிலம்பரசனுடன் ஜோடி சேர்ந்த கொஞ்ச நாளில் இருந்த பெயரை கெடுத்துக் கொண்டார். இருவரும் மிக மிக நெருக்கமாக பழகிய இருவரும், அந்தரங்கமாக இருந்த காட்சிகளைக் கூட படம் பிடித்து அம்பலத்தில் விட்டனர்.

சில காரணங்களால் சிம்புவுடனான காதல் முறிந்துவிட்டதாக நயன்தாரா அறிவித்தார்.
தன் இருப்பிடத்தை சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றினார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். குறிப்பாக நாகார்ஜுனாவுடன். இதனால் இருவருக்கும் மிக நெருக்கமான உறவிருப்பதாக பேச்சு கிளம்ப அதை நாகாரஜுனாவும் மறுக்கவில்லை.

‘மறக்க முடியாத வில்லு!’

விஜய் கதாநாயகனாக நடித்த படம் ‘ரசிகர்களுக்கு’ மட்டும் அல்ல, பிரபுதேவாவுக்கும் மறக்க முடியாத படமானது.

அந்த படப்பிடிப்பின்போது பிரபுதேவா – நயன் இடையே மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒரே ஒட்டலில் தங்க ஆரம்பித்தார்கள். இதுபற்றி பரபரப்பாக செய்திகள் வரத் துவங்கின.

இதுபற்றி பிரபுதேவாவிடம் நிருபர்கள் கேட்டபோது, “அது என் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி பேச விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.

நயன்தாராவும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

ரகசிய திருமணம்?

இந்த நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் ஐதராபாத்தில் நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்டதாக, ஹைதராபாத் முழுக்க பரபரப்பான தகவல் பரவியது.

இதுபற்றி பிரபுதேவா குடும்பத் தரப்பில் விசாரித்தபோது அவர்கள் மறுப்பும் சொல்லவில்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.

ஆனால் பிரபுதேவாவின் நண்பர்கள் இந்தத் திருமணம் நடந்தது உறுதி என்றும், பிரபுதேவாவின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக பிரபு தேவாவின் தந்தை சுந்தரம், நயன்தாராவை பிரபுதேவா தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் முதல் மனைவியை தள்ளி வைத்துவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்க, அதை பிரபுதேவா ஒப்புக் கொண்டார் என்றும் கூறினர்.

கடந்த ஒரு மாதமாகவே நயன்தாரா-பிரபுதேவா சேர்ந்தே வசிப்பதாகவும் தெரிவித்தனர் அவர்கள்.

ஆனால் நயன்தாரா தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது என்று கோபமாகத் தெரிவித்தனர்.

ஒளிக்க மாட்டேன்!

நயன்தாராவோ, ‘என் திருமண செய்தியை உரிய நேரம் வரும்போது நானே முறைப்படி அறிவிப்பேன். அதை ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என செய்தி வெளியிட்டுள்ளார்.

1996-ம் ஆண்டு தன் நடனகுழுவிலிருந்த ரம்லத் என்ற பெண்ண காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா, கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அவர்களை தலைமறைவாகவே வைத்திருந்தார். சமீபத்தில்தான் தனக்கு திருமணம் ஆகி, 3 குழந்தைகள் இருப்பதை வெளியிட்டார்.

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்புதான் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்


உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம்விளங்கும்.... உனக்கும்கவிதை வரும்...... கையெழுத்துஅழகாகும்..... தபால்காரன்தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்... கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! ***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்... காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்... இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா உருண்டையொன்றுஉருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி இந்த பூக்கள்எல்லாம்காதலை கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்! ***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்... காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்... காதலித்துப் பார்! ***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே... அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே... அதற்காகவேனும்... ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... வாழ்ந்துகொண்டேசாகவும் முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே... அதற்காக வேணும்...காதலித்துப் பார்! வைரமுத்துவின் கவிதை தாலாட்டு உங்களுக்காக வழங்கியது