சனி, 16 ஜனவரி, 2010

உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்


உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம்விளங்கும்.... உனக்கும்கவிதை வரும்...... கையெழுத்துஅழகாகும்..... தபால்காரன்தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்... கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! ***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்... காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்... இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா உருண்டையொன்றுஉருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி இந்த பூக்கள்எல்லாம்காதலை கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்! ***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்... காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்... காதலித்துப் பார்! ***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே... அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே... அதற்காகவேனும்... ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... வாழ்ந்துகொண்டேசாகவும் முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே... அதற்காக வேணும்...காதலித்துப் பார்! வைரமுத்துவின் கவிதை தாலாட்டு உங்களுக்காக வழங்கியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக