சனி, 16 ஜனவரி, 2010

பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!


June 6, 2009 | 1,717 views

பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!

பிரபுதேவாவும் நடிகை நயன்தாராவும் ஹைதராபாத்தில் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்தச் செய்தியை நயன்தாரா தரப்பில் மறுத்தாலும், பிரபுதேவா குடும்பத்தினர் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டனர்.

மீடியா முழுக்க இதே செய்தியாக உள்ளது இன்றைக்கு. இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முதல்நிலை நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா.

‘ஐயா’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார். அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகி முதல் நிலை நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

பின்னர் ‘வல்லவன்’ படத்தில் சிலம்பரசனுடன் ஜோடி சேர்ந்த கொஞ்ச நாளில் இருந்த பெயரை கெடுத்துக் கொண்டார். இருவரும் மிக மிக நெருக்கமாக பழகிய இருவரும், அந்தரங்கமாக இருந்த காட்சிகளைக் கூட படம் பிடித்து அம்பலத்தில் விட்டனர்.

சில காரணங்களால் சிம்புவுடனான காதல் முறிந்துவிட்டதாக நயன்தாரா அறிவித்தார்.
தன் இருப்பிடத்தை சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றினார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். குறிப்பாக நாகார்ஜுனாவுடன். இதனால் இருவருக்கும் மிக நெருக்கமான உறவிருப்பதாக பேச்சு கிளம்ப அதை நாகாரஜுனாவும் மறுக்கவில்லை.

‘மறக்க முடியாத வில்லு!’

விஜய் கதாநாயகனாக நடித்த படம் ‘ரசிகர்களுக்கு’ மட்டும் அல்ல, பிரபுதேவாவுக்கும் மறக்க முடியாத படமானது.

அந்த படப்பிடிப்பின்போது பிரபுதேவா – நயன் இடையே மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒரே ஒட்டலில் தங்க ஆரம்பித்தார்கள். இதுபற்றி பரபரப்பாக செய்திகள் வரத் துவங்கின.

இதுபற்றி பிரபுதேவாவிடம் நிருபர்கள் கேட்டபோது, “அது என் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி பேச விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.

நயன்தாராவும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

ரகசிய திருமணம்?

இந்த நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் ஐதராபாத்தில் நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்டதாக, ஹைதராபாத் முழுக்க பரபரப்பான தகவல் பரவியது.

இதுபற்றி பிரபுதேவா குடும்பத் தரப்பில் விசாரித்தபோது அவர்கள் மறுப்பும் சொல்லவில்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.

ஆனால் பிரபுதேவாவின் நண்பர்கள் இந்தத் திருமணம் நடந்தது உறுதி என்றும், பிரபுதேவாவின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக பிரபு தேவாவின் தந்தை சுந்தரம், நயன்தாராவை பிரபுதேவா தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் முதல் மனைவியை தள்ளி வைத்துவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்க, அதை பிரபுதேவா ஒப்புக் கொண்டார் என்றும் கூறினர்.

கடந்த ஒரு மாதமாகவே நயன்தாரா-பிரபுதேவா சேர்ந்தே வசிப்பதாகவும் தெரிவித்தனர் அவர்கள்.

ஆனால் நயன்தாரா தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது என்று கோபமாகத் தெரிவித்தனர்.

ஒளிக்க மாட்டேன்!

நயன்தாராவோ, ‘என் திருமண செய்தியை உரிய நேரம் வரும்போது நானே முறைப்படி அறிவிப்பேன். அதை ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என செய்தி வெளியிட்டுள்ளார்.

1996-ம் ஆண்டு தன் நடனகுழுவிலிருந்த ரம்லத் என்ற பெண்ண காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா, கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அவர்களை தலைமறைவாகவே வைத்திருந்தார். சமீபத்தில்தான் தனக்கு திருமணம் ஆகி, 3 குழந்தைகள் இருப்பதை வெளியிட்டார்.

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்புதான் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக